Home »
» தமிழகம் முழுவதும் தளர்வின்றி இன்று முழு ஊரடங்கு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுகிழமையான இன்று தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 103 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Posts:
வைகோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்! June 17, 2019
வைகோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்.
சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீ… Read More
மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை! June 17, 2019
தமிழகத்தில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவேண்டியும், நாகை அடுத்த நாகூர் கடற்கரையில், இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.… Read More
கருப்பு பணம் குவித்துள்ள 50 இந்தியர்களின் தகவல்களை மத்திய அரசிற்கு தர உள்ளது ஸ்விஸ்! June 16, 2019
Authors
தங்கள் நாட்டில் உள்ள வங்கிகளில் கருப்பு பணம் குவித்து வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசிடம் ஸ்வி… Read More
கோடை வெயிலில் குழம்பிப் போய் உள்ளார் ; பொன்.ராதாகிருஷ்ணனை சாடும் பாலகிருஷ்ணன்! June 17, 2019
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாஜகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவருமான பொன்.ராதாகிருஷ்ணன், கோடை வெயிலில் குழம்பி போய் உள்ளதாக காட்டமாக சாடியுள்ளார்… Read More
அவசரச் சட்டத்தை கொண்டுவந்து ராமர் கோவிலை கட்டுவோம்: உத்தவ் தாக்கரே சூளுரை! June 16, 2019
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அவசரச் சட்டத்தினை கொண்டு வந்து ராமர் கோவிலை கட்டியெழுப்புவோம் என தெரிவித்துள்ளார் சிவசேனா கட்சியின் த… Read More