புதன், 12 ஏப்ரல், 2017

பா.ஜனதா இளைஞரணித் தலைவர் தலைக்கு கொல்கத்தா இமாம் ரூ. 22 லட்சம் பரிசு அறிவிப்பு!

பா.ஜனதா இளைஞரணித் தலைவர் தலைக்கு கொல்கத்தா இமாம் ரூ. 22 லட்சம் பரிசு அறிவிப்பு !! 
கொல்கத்தா,
 
பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சல்மான் ருஷ்டி போன்றோர்களுக்கு பத்வா விடுத்து அறியப்பட்ட இஸ்லாமிக் மத குரு, மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை கொண்டுவருபவருக்கு ரூ11 லட்சம் தருவதாக அறிவிப்பு வெளியிட்ட பா.ஜனதா இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஸ்னே தலைக்கு ரூ. 22 லட்சம் பரிசு அறிவித்து உள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் மிகவும் பிரபலாமான கொல்கத்தா திப்பு சுல்தான் ஷாஹி மசூதியின் இமாம் நூர்-உர் ரகுமான் பார்காதி இந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்து உள்ள பேட்டியில்,
 
“மம்தா பானர்ஜி எங்களுடைய மரியாதைக்குரிய தலைவர், அவரை என்னுடைய சகோதரியாக கருதுகின்றேன். பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் தலையை கொண்டு வருபவருக்கு நான் ரூ. 22 லட்சம் பரிசாக வழங்குவேன். பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். இதுபோன்று பேசும் என்பது எதிர்பார்த்ததே,” என கூறிஉள்ளார். 
 
மம்தா பானர்ஜியின் தலைக்கு பா.ஜனதா தலைவர் ஒருவர் பரிசு அறிவித்த விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவையிலும் எழுப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு கடும் கண்டனம் தெரிவித்தன. பாராளுமன்றமும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா இளைஞரணித் தலைவருக்கு எதிராக கொல்கத்தாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர், இந்நிலையில் இமாம் இவ்வாறு பேசிஉள்ளார். 


http://kaalaimalar.net/bengal-s-fatwa-imam-puts-rs-22-lakh-counter-price/

Related Posts: