செவ்வாய், 11 ஏப்ரல், 2017

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்! April 11, 2017

மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!


மோட்டார் வாகனச் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

வாகன விபத்துக்களில் உயிரிழப்போர் குடும்பத்துக்குப் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் காப்பீடு செய்திருக்க வேண்டும் என்றும் சட்டத் திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கும் அதிக அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. விபத்துக்களைத் தடுக்கும் வகையில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோருக்கு 100 ரூபாயாக இருந்த அபராத தொகையை ஆயிரம் ரூபாயாக உயர்த்தியும், இந்த சட்ட திருத்தத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு முறையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 

1988ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தில் முப்பது ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாகத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது