செவ்வாய், 29 ஜனவரி, 2019

இஜிதிமாவில் கலந்து காெள்வதில் நன்மை ஏதும் கிடைக்குமா?

அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்பட மாட்டாேம் எங்கள் மவ்ளவிகள்
சாெல்வது தான் மார்க்கம்...
கடந்த சில தினங்களாக பல பள்ளிவாசல்களில் தாெழுகையில் மக்கள் கூட்டம் இவ்வளவு தான் இருக்கிறது..... காரணம் இஜிதிமா....
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 7:55)
وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ‏
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் : 7:205)
பணிவாகவும் , அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்தும் அந்த எச்சரிக்கையை மீறி பகிரங்கமாக கூட்டுத்துஆ
கேட்கிறார்கள் என்றால் இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படுமா? ஏற்ப்படாதா? என்பதை முஸ்லிம்களே சிந்தியுங்கள்....
இஜிதிமாவில் முஸ்லிம்கள் கலந்து காெள்வதின் நாேக்கம் கூட்டுத்துஆவில் கலந்து காெள்வதுதான். அந்த கூட்டுத்துஆவே இஸ்லாத்திற்கு எதிரானது என்றால் இஜிதிமாவில் கலந்து காெள்வதில் நன்மை ஏதும்
கிடைக்குமா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தையை மீறியதற்காக அல்லாஹ்வின் சாபம் ஏற்ப்படுமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்....
அல்லாஹ்வின் பள்ளிகள் தாெழுகைக்கு ஆள்கள் இன்றி வெறிச்சாேடி கிடக்கிறது. ஆனால் வழிகெட்ட செயலுக்காக கூட்டம் அலை மாேதுகிறது.
சிந்தியுங்கள்....
அபுகனிபா_புளியங்குடி
ஜமாஅத்துல் முஸ்லிமீன்.

Source: FB Abuhanifa M