ஞாயிறு, 27 ஜனவரி, 2019

முற்றிலும் அழிந்ததாக நினைக்கப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் கண்டுபிடிப்பு! January 26, 2019


Image
முற்றிலும் அழிந்துபோனதாக கூறப்பட்ட ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்ட தட்டை சுறா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்துவந்தார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான கேனரி தீவுப் பகுதியில் வித்தியாசமான சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதை ஆய்வு செய்ததில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டை சுறா என்பது தெரியவந்தது. 
வரைமுறையற்ற வேட்டைகளால் இந்தச் சுறாவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணமுடியவில்லை என்பதால் அழிந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், மீண்டும் தட்டை சுறா தென்பட்டுள்ளதால் கடல் ஆராய்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  
 
source: http://www.ns7.tv/ta/tamil-news/world-important/26/1/2019/rare-angel-sharks-found-living-coast-wales