திங்கள், 14 ஜனவரி, 2019

சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்லலாமா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் : ராகுல் காந்தி January 14, 2019

source ns7.tv

Image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதா வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 
துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரம் மிகவும் சிக்கலாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற கருத்தும், செல்லக்கூடாது என்ற கருத்தும் அவரவர் பார்வையில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ள ராகுல் காந்தி, இவ்விஷயத்தில், எது சரி என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என தெரிவித்துள்ளார். 
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளதாக சிபிஎம் கட்சி விமர்சித்துள்ளது. அதேநேரத்தில், ராகுலின் இந்த மாற்றத்தை கேரள காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றுள்ளனர்.