புதன், 16 ஜனவரி, 2019

கர்நாடகாவில் ஆளும் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியா? January 16, 2019

Image

source: ns7.tv

கர்நாடகாவில் ஆளும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதுள்ளதாக கூறப்படுவது வெறும் மாயை என, மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 
கர்நாடகாவில் மொத்தம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 224 ஆகும். பாஜக எம்எல்ஏக்கள் ம் 104ஆக உள்ளது. காங்கிரஸ் கட்சி 80 எம்எல்ஏக்களும் உள்ளனர் அதுபோல தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கும்  மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 37 எம்எல்ஏக்களும் உள்ளனர். அங்கு பெரும்பான்மையை என்பது 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு பெரும்பான்மை பலத்தைவிட, 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கூடுதலாக உள்ளது. நாகேஷ்,சங்கர்  2 சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளித்து வந்த நிலையில், தங்கள் ஆதரவை நேற்று வாபஸ் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர், அரசுக்கு அளித்த வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, அம்மாநில ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து, குமாரசாமி தலைமையிலான அரசுக்கான ஆதரவு எண்ணிக்கை 117ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தேவகவுடா, ஆதரவை வாபஸ் பெற்ற 2 எம்எல்ஏக்களும் சுயேட்சைகள் எனவும், அவர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தர தேவையில்லை எனவும் தெரிவித்தார். மேலும், சில ஊடகங்கள்தான் இவ்விவகாரத்தை பெரிதுப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.