செவ்வாய், 29 ஜனவரி, 2019

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் ஒழிந்துவிட்டதா? : சீமான் கேள்வி January 29, 2019

Image
பல மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக, அங்கெல்லாம் ஊழலை ஒழித்து விட்டதா என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அமைக்கப்படும், 8 வழிசாலை, 10 வழி சாலைகள் அனைத்தும் முதலாளிகளுக்கானது என்றும், அவை மக்களுக்கானது அல்ல என்றும் கூறினார். 
கார், செல்போன் போன்றவற்றை கொடுக்க திட்டம் வைத்திருக்கும் இந்தியாவில், விவசாயிகளைப் பற்றிய சிந்தனைகள் கிடையாது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். 
source: ns7.tv