சனி, 12 ஜனவரி, 2019

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா விராலிமலை ஜல்லிக்கட்டு? January 12, 2019

Image
விராலிமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுமா என்பதை மதிப்பிட, லண்டனில் இருந்து மதிப்பீட்டாளர்கள் வருகை தர உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பட்டமரத்தான் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டை ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், போட்டில் சுமார் 2 ஆயிரம் காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். 
காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் இருசக்கர வாகனம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

source ns7..tv