வியாழன், 31 ஜனவரி, 2019

சென்னையில் மட்டும் 87.39 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்! January 31, 2019

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த ஜனவரி 1 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியில் 87.39 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. 14 வகையான பிளாஸ்டிக்குகளை தடை செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 12 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக மக்களை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 15 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் சோதனை 
நடைபெற்றது. இதில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை 87.39 மெட்ரிக் டன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தகவல் தெரிவித்திருக்கிறது

source: ns7.tv