வெள்ளி, 18 ஜனவரி, 2019

கோடநாடு வீடியோ வெளியான விவகாரம்: சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்! January 18, 2019

Image
கோடநாடு வீடியோ வெளியான விவகாரத்தில், டெல்லியில் கைதான சயான், மனோஜ் ஆகியோர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உட்பட மூன்று பேர் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டனர்.
சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். தமிழகம் கொண்டுவரப்பட்ட அவர்கள், சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க, அனுமதி மறுத்த நீதிமன்றம் இருவரையும் வரும் 18ம் தேதி வழக்கறிஞர்களுடன் ஆஜராக உத்தரவிட்டது. அதன்படி சயான், மனோஜ் இருவரும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். 

SOURCE: NS7.TV