வெள்ளி, 18 ஜனவரி, 2019

குமரி கடற்பகுதியில் கடும் பனிமூட்டம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! January 18, 2019

Image
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார கடற்பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

குளச்சல் துறைமுகத்திலிருந்து, குளச்சல், குறும்பனை, கோடிமுனை, கொட்டில்பாடு, மண்டைக்காடு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் காணப்படுவதால், மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். இன்று அதிகாலை 2 மணிக்கு கடலுக்கு செல்ல தயாரான மீனவர்கள், பனிமூட்டத்தால் கடற்பகுதி முழுவதும் இருண்டு காணப்பட்டதை அடுத்து, கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

SOURCE NS7.TV