செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்! January 29, 2019

Image
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக திருக்காரவாசல் கடைவீதியில் நேற்று முன் தினம் முதல் கிராம மக்கள் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொடங்கியது. இந்த காத்திருப்பு போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பங்கேற்றார். போராட்டத்தின் போது பெண்கள் ஓப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிமுன் அன்சாரி  ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.
source: Ns7.tv