செவ்வாய், 22 ஜனவரி, 2019

கேஸ் கசிவால் தீக்காயம்








source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467754
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கேஸ் கசிவால் தீக்காயம் அடைந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கடந்த 17-ம் தேதி இலுப்பூர் வெட்டுக்காடு கிராமத்தில் பொன்னுமணி என்பவர் சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவை அறியாமல் அடுப்பை பற்றவைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பொன்னுமணியின் மீது தீப்பற்றியுள்ளது. அதனைத்தொடர்ந்து அந்த நேரம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது குழந்தைகள் சஞ்சய் மற்றும் சங்கவி ஆகியோர் மீதும் தீப்பற்றியுள்ளது. இதில் படுகாயமடைந்த மூவரையும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அந்த போதிய வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.