சனி, 19 ஜனவரி, 2019

பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரளும் மாநிலக் கட்சிகள்; கொல்கத்தாவில் இன்று "மெகா" பேரணி! January 19, 2019

Image

source ns7.tv

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் இன்று எதிர்க்கட்சிகளின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவகவுடா, தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின், மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட்டம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் வலிமையான செய்தியை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.