
இந்தியாவின் 50,000 கிராமங்களுக்கு இன்னும் மொபைல் சேவை வழங்கப்படாமல் உள்ளது என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்ப்புத் துறை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த மனோஜ் சின்ஹா, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மொபைல் சேவை சென்றடைந்துவிட்டது என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. இன்னும் 50,000 கிராமங்களுக்கு மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லக்ஷத்வீப் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளின் பெரும்பாலான கிராமங்களில் இன்னும் மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்படாமல் உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான கணக்கெடுப்பை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், இந்தியாவின் கனவு திட்டமான ’பாரத்நெட்’ மூலமாக அனைத்து கிராமங்களுக்கும் தொலைதொடர்பு சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது எனவும் ‘மனோஜ் சின்ஹா’ தெரிவித்தார்.
தொலைதொடர்ப்புத் துறை தொடர்பாக எதிர்க்கட்சிகளின் சரமாரி கேள்விகளுக்கு பதிலளித்த மனோஜ் சின்ஹா, இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் மொபைல் சேவை சென்றடைந்துவிட்டது என நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. இன்னும் 50,000 கிராமங்களுக்கு மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்படாமல் உள்ளது. குறிப்பாக நக்சல்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், லக்ஷத்வீப் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளின் பெரும்பாலான கிராமங்களில் இன்னும் மொபைல் நெட்வொர்க் சேவை வழங்கப்படாமல் உள்ளது” என தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள தொலைத்தொடர்பு அதிகாரிகளுக்கும் இதுதொடர்பான கணக்கெடுப்பை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும், இந்தியாவின் கனவு திட்டமான ’பாரத்நெட்’ மூலமாக அனைத்து கிராமங்களுக்கும் தொலைதொடர்பு சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது எனவும் ‘மனோஜ் சின்ஹா’ தெரிவித்தார்.