சனி, 8 ஏப்ரல், 2017

விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்ட எம்.பியின் புதிய சர்ச்சை! April 08, 2017



சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், தனக்கு விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்ட பிறகு, தனது பெயரில் வேறு யாரோ 7 முறை டிக்கெட் முன்பதிவு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் தாக்கியதால் விமானங்களில் பறக்க 5 விமான நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்திருந்தது. 

அதைத் தொடர்ந்து 7 முறை அவரது பெயரில் முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையும் விமான நிறுவனங்கள் ரத்து செய்தன. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரிய சிவசேனா எம்.பி., விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவிற்கும் மன்னிப்பு கடிதம் அனுப்பி இருந்தார். 

இதையடுத்து, விமானப் போக்குவரத்துத்துறை அனுப்பிய கடிதத்தின் பேரில், சிவசேனா எம்.பி.க்கு விதிக்கப்பட்ட தடையை ஏர் இந்தியா வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்நிலையில், தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் தனது பெயரில் வேறு யாரோ 7 முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்ததாக ரவீந்திர கெய்க்வாட் குற்றம்சாட்டியுள்ளார். இப்பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts: