ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள், தங்கள் டெபாசிட் தொகையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில், மறு தேர்தல், ஓராண்டுக்குள்ளாகவோ அல்லது மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையிலோ நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி உள்ள போதிலும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டால் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தேர்தல் நடத்தலாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டப் பிரிவின்படி, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒராண்டுக்குள்ளாகவோ, அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ நடத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில் ஜுன் 5ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில், மறு தேர்தல், ஓராண்டுக்குள்ளாகவோ அல்லது மத்திய அரசின் ஆலோசனையின் அடிப்படையிலோ நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதி உள்ள போதிலும், பல்வேறு காரணங்களால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டால் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று தேர்தல் நடத்தலாம் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டப் பிரிவின்படி, ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒராண்டுக்குள்ளாகவோ, அல்லது மத்திய அரசின் ஆலோசனை அடிப்படையிலோ நடத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில் ஜுன் 5ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய சூழலில் அதற்கான வாய்ப்புகள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.