
ஆளுநரிடம் இருந்து எந்த தகவல் வந்தாலும், தனக்கும், அமைச்சர்களுக்கும் தெரிவிக்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாதென, அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை அளுநர் கிரண்பேடியிடம் இருந்து எந்த தகவல் வந்தாலும், தனக்கோ அல்லது துறை அமைச்சர்களுக்கோ தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.
இந்த தகவலை புதுச்சேரி அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தெரியப்படுத்துமாறும், தலைமைச் செயலாளருக்கு, முதலமைச்சர் நாராயணமாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதாவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை அளுநர் கிரண்பேடியிடம் இருந்து எந்த தகவல் வந்தாலும், தனக்கோ அல்லது துறை அமைச்சர்களுக்கோ தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.
இந்த தகவலை புதுச்சேரி அரசின் அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு தெரியப்படுத்துமாறும், தலைமைச் செயலாளருக்கு, முதலமைச்சர் நாராயணமாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.