செவ்வாய், 1 ஜனவரி, 2019

கஜா புயல் நிவாரணம்: ரூ.1,146 கோடி ஒதுக்கியது மத்திய அரசு! December 31, 2018

Image
source: ns7.tv

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு, மத்திய அரசு ஆயிரத்து 146 கோடி ரூபாய் நிவாரண தொகை ஒதுக்கியுள்ளது. 
தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. ஏராளமான வீடுகள், தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். 
இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக ஆயிரத்து 146 கோடியே 12 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Posts:

  • உலகை சுற்றும் விமானம் 09103/2015 சூரிய சக்தியால் இயங்கும் விமானம் , உலகை சுற்ற துபாயில் தனது பயணத்தை ஆரபித்தது . அது உலகை 35,000 கிலோமீட்டர் சுற்றும் என்று கணிக… Read More
  • உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறை............ நமது வீட்டிலேயே கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு உடல் பருமனை சுலபமாக கட்டுக்குள் கொண்டுவரும் முறைகளை பற்றி பார்போமா..உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்ப… Read More
  • எலுமிச்சை சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தி… Read More
  • சகோ முஜீப் - வாயடைத்துப்போன விவாதம் 21:19 (ஓர் நினைவூட்டல்) சகோதர் பீஜே மொழிபெயர்த்த திருக்குரானில் பல அடிப்படை தவறு இருக்கின்றது என்று பல இடங்களில… Read More
  • பன்றிக் காய்ச்சல் பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே! காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இ… Read More