திங்கள், 7 ஜனவரி, 2019

நீதிமன்ற உத்தரவையும் மீறி 8 வழி சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசு! January 06, 2019


Image
விவசாயிகளின் எதிர்ப்பையும், நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டு வழி சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசை கண்டித்து சேலம் அருகே விவசாயிகள் குடும்பத்தோடு பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சேலம் – சென்னை இடையில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை வழி சாலை என்ற பெயரில் அரசு அறிவித்து உள்ள எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,  திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட அனுமதி கேட்டனர்.
காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், உத்தமசோழபுரத்தில் ஒன்று திரண்ட விவசாயிகள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்போராட்டத்திற்கு திமுக, அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாமக, தமாகா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இதேபோல் எட்டு வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மண்மலை பகுதியில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
source ns7.tv

Related Posts:

  • காது வலியை குணபடுத்தும் நாய்வேளை-ஒரு சிறந்த வலி நிவாரணி-எப்படி..? உடல் வலியை போக்க கூடியதும், காது வலிக்கு மருந்தாக அமைவதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்ட… Read More
  • Hadis ஒரு முஸ்லிமுடைய மானத்தோடு விளையாடுவதினால் ஏற்படும் விபரீதங்கள். கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக… Read More
  • வக்பு உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். வக்பு என்ற அரபி வார்த்தைக்கு அ… Read More
  • ஊடக நண்பர்களின் கவனத்திற்கு....!! (அதிகப்படியாக Share செய்து ஊடக நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்...) தமிழக ஊடகங்கள் எங்கோ ஒரு மூளையில் ISIS இயக்கத்தினர் பயிற்சி எடுக்க… Read More
  • Missing Read More