Home »
» விகாஷ் துபே என்கவுன்டர் சம்பவம்: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் - உ.பி அரசு
உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஷ் துபே, போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
உத்தபிரதேச மாநிலம் கான்பூர் அருகே 8 போலீசாரை சுட்டுக்கொன்ற பிரபல ரவுடி விகாஷ்துபேவை மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜயினியில் போலீசார் பிடித்தனர். பின்னர் துபேவை கைது செய்து அழைத்து வந்த போது நிகழ்ந்த கார் விபத்தை பயன்படுத்தி துபே தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர். முன்னதாக அவரது கூட்டாளிகளும் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
இந்த என்கவுன்டர்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் விகாஷ்துபே சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்க உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் இந்த ஆணையம் 2 மாதத்தில் தனது அறிக்கையை சமர்பிக்கும் என உத்தபிரதேச அரசு கூறியுள்ளது.
Related Posts:
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவில் தொடரும் அவலம்! August 23, 2019
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் முடிவுகளில், ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி விழுக்காடு இருந்த நிலையில், இரண்டாம்… Read More
சிதம்பரத்தை சிக்கவைத்த இந்திராணி முகர்ஜி.... யார் இந்த இந்திராணி முகர்ஜி? August 23, 2019
ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற ப.சிதம்பரம் உதவினார் என்பது தான் தற்போது அவர் மீது வைக்கப்பட்டுள்ள முக்கியக்… Read More
பழங்குடியின பெண் ஓட்டுநர்கள் - அசத்தும் மகாராஷ்டிர அரசு..! August 24, 2019
பழங்குடியினத்தை சேர்ந்த பெண்களை அரசு பேருந்து ஓட்டுநர்களாக நியமிக்க மகாராஷ்டிரா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் … Read More
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப.சிதம்பரத்திடம் விடிய விடிய விசாரணை.... August 23, 2019
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம், விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள் அடி… Read More
இந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாதார நெருக்கடி நிலவுகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் கருத்து... August 23, 2019
இந்தியாவில் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவுவதாக, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கட… Read More