ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

கொரோனா பாதிப்பு: மிகவும் மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறதா கேரளா?

 கடந்த மூன்று நாட்களில் 18,000 க்கும் மேற்பட்ட புதிய  பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கேரளா தற்போது கொரோனா தொற்றில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கேரளா குறைந்த நோயாளிகளை கொண்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களில், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட விகிதத்தை பார்க்கும் பொழுது, அதிக பாதிப்பைக் கொண்ட முதல் 10 மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் கேரளா மிக விரைவில் நுழைவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன .

கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மாநிலத்தில் கிட்டத்தட்ட 35,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . ஒட்டுமொத்தமாக  அம்மாநிலத்தில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.61  லட்சமாக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்று பாதிப்பின் தினசரி வளர்ச்சி விகிதம் 3.51 சதவீதமாகும் . இந்த, விகிதம் தேசிய அளவை (1.53 %) விட அதிகமாகும்

கேரளாவில், தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 49,000 க்கும் அதிகமாக  உள்ளன.மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா பிரேதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநில்கங்கள் மட்டுமே கேரளாவை விட அதிக ஆக்டிவ் நோயாளிகளை கொண்டுள்ளன.

 

 

வியாழக்கிழமை,  செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ,”நிலைமை மிகவும்  மோசமாக உள்ளது” என்று எச்சரித்தார். மேலும், “பல மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் கணிசமான உயர்ந்துள்ளன. நாங்கள் ஒரு மோசமான சூழ்நிலைக்கு நகர்கிறோம், ”என்று அவர் கூறினார்.

ஐ.ஐ.எம் கோழிக்கோடு சுகாதார பொருளாதார நிபுணர்  ரிஜோ எம்.ஜான் கூறுகையில், “ஒப்பிட்டளவில் இங்கு சோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீபத்திய நாட்களில் அதிகரித்து காணப்படுகிறது. ஏனெனில், நிறைய பாதிப்புகள்  இங்கு கண்டறியப்படவில்லை. மேலும்,” தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து  வரும் நிலையில், கேரளா தனதுபரிசோதனைகளை முடுக்கிவிடவில்லை. கூடுதல் சோதனை இல்லாமல், மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பின் உச்சத்தை நாம் கணிக்க கூட முடியாது, ”என்று கூறினார்.

கண்டறியும் சோதனைகளை நடத்துவதில் கேரளா மெதுவான தொடக்கமாக இருந்தது. இது கடந்த இரண்டு மாதங்களில் எடுக்கப்பட்டுள்ளது, ஆனால்

இருப்பினும், கோவிட் 19 மேலாண்மை குறித்து மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஃபசல் கஃபூர் கூறுகையில், ” சோதனை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அவசியத்தை நாங்கள் உணர்கிறோம். இதுவரை மொத்தம் 26.57  பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன .  கடந்த மூன்று நாட்களில் மட்டும், கிட்டதட்ட 50,000க்கும் மேற்பட்ட   பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது முந்தைய வாரங்களை விட மிகவும் அதிகமாகும். இதுவும், சமீபத்திய பாதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

 

இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 85,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகமாக உள்ளது.

இதுவரை மொத்தம் 48.49 லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 93,000  நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 59.03 என்ற மொத்த கொரோனா பாதிப்பில் 82 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்போது மீண்டு வந்தனர்.

கடந்த எட்டு நாட்களில், கிட்டத்தட்ட ஏழு நாட்களில், புதிய பாதிப்புகளை விட, புதிதாக குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகாமாக உள்ளது. இது, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை (9.6 லட்சம்) குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளது.

மகாராஷ்டிராவில் உறுதிப்படுத்தப்பட்ட நோய்த் தொற்றின் எண்ணிக்கை இப்போது 13 லட்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 18,000 க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. மாநிலத்தில் இறப்பு எண்ணிக்கை 35,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா தொற்று உயிரிழப்புகளில்  83% பேர் இம்மாநிலத்தில் அடங்குவர்.