செவ்வாய், 29 செப்டம்பர், 2020

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு சோனியா வேண்டுகோள்!

 

Image

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்றும், அரசியல் சட்டத்தின் 254 (2)- வது பிரிவு இதற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை பயன்படுத்தி மத்திய அரசின் வேளாண் சட்டங்களை நிராகரிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசிக்குமாறு, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்