திங்கள், 21 செப்டம்பர், 2020

வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக்குழுவினர் போராட்டம்!

Image

வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து, காவிரி உரிமை மீட்புக்குழுவினர், சட்ட நகல் எரித்து போராட்டம் நடத்தினர். 

இரு அவைகளிலும் வேளாண் திருச்சட்ட மசோதா நிறைவேறிய நிலையில், மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி, தஞ்சை ஆற்றுப்பாலத்தில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் திடீரென சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.  

இதேபோன்று, ஈரோடு மாவட்டம் பவானி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். மயிலம்பாடியில் விளை நிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேளாண் திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை ரத்து செய்ய கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் வேளாண் திருத்தச்சட்டத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்ததை கண்டித்தும் முழங்கினர்