வெள்ளி, 25 செப்டம்பர், 2020

ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் இறக்க காரணம் என்ன?

 Explained: Why have hundreds of whales died in Australia? : திங்கள் கிழமையில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாங் ஃபின்னெட் பைலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் அதிக அளவு திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிகழ்வாக இது காணப்படுகிறது. இவைகள் கூட்டம் கூட்டமாக தனித்துவிடப்பட்ட தஸ்மானியாவின் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கியது.

இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்க காரணம் என்ன?

தனியாகவோ, குழுவாகவோ திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. உடல்நிலை சரியில்லை அல்லது அடி பட்டிருந்தால் மட்டுமே திமிங்கலங்கள் கரை ஒதுங்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இத்தனை திமிங்கலங்கள் கரை ஒதுங்க காரணம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.  இருப்பினும் இந்த நிகழ்வுக்கு சில காரணங்கள் இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஸ்கூலிங் மீன்களை தேடிக் க்கொண்டு மேலோட்டமான நீரோட்டத்தில் நீந்தி வந்து இவ்வாறு திசை திருப்பப்பட்டிருக்கலாம். கில்லர் திமிங்கலங்கள் அல்லது சுறாக்களிடம் இருந்து தப்பிக்கும் போது ஏற்பட்ட அதிர்ச்சியால் திசை மாறியிருக்கலாம். உணவுகள் அதிகம் இருக்கும் நீரோட்டத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம். கடற்கரை மற்றும் அதன் வடிவம் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். நீந்துவதற்கான எதிரொலியை சாய்வான கரையோரங்கள் எதிரொலித்து திசை திருப்பியிருக்கலாம்.

ஆஸ்திரேலியாவின் வேளாண், நீர், மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பைலட் மற்றும் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் எக்கோலொகேஷன் அல்லது சோனார் ஒலி அலைகளை ஏற்படுத்தி பயணிப்பவை. சில சமயங்களில் அவை இவ்வாறு கரை ஒதுங்குகிறது என்று கூறியுள்ளது.

கரை ஒதுங்கிய திமிங்கலங்களின் நிலை என்ன?

தஸ்மானியாவின் முதன்மை தொழிற்சாலைகள், பூங்காக்கள், நீர் மற்றும் சுற்றுச்சூழலியல் துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, கரையொதுங்கிய நிறைய திமிங்கலங்கள் உயிரிழந்துவிட்டன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் சில திமிங்கலங்களை பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அந்த திமிங்கலங்களை கரையில் இருந்து இழுத்துக் கொண்டு வந்து கடலில் விட்டுள்ளனர்.

இப்படி திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது இயல்பானதா?

திமிங்கலங்கள் கரை ஒதுங்குதல் தற்போது அல்லது அரிதாக நிகழும் நிகழ்வல்ல. இறந்து போன திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது வழக்கமானது. கி.மு. 300ம் ஆண்டில் இருந்தே அளவுக்கு அதிகமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது மனிதர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அவைகள் ஏன் சில சமயங்களில் கடற்கரைகளை ஒட்டி சுற்றுகிறது என்பது தெரியவில்லை என்று அரிஸ்டாட்டில் எழுதியுள்ளார். பல ஆண்டுகளுக்க்கு பிறகு, இவ்வாறு திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது, கடல் தெய்வமான நெப்ட்யூன் வழங்கிய தண்டனை என்று ரோமன்புரிவாசிகள் நினைத்தனர். இதற்கு முன்பு தஸ்மானியாவில் 1935ம் ஆண்டு 294 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின என்பது குறிப்பிடத்தக்கது.