ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு... போராட்டம் நடத்தப் போவதாக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு!

 

Image

அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மனித சங்கிலி போராட்டம் நடத்தப் போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று மாற்றவும், பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க உருவாக்கப்படும் புதிய பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,  பல்கலைக்கழக வளாகத்தில் நாளை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பெயர் மாற்றும் முடிவை கைவிடும் வரை, பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் பேராசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

Related Posts: