வியாழன், 24 செப்டம்பர், 2020

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி -க்கள் ஆர்ப்பாட்டம்!

 

Image

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்ட மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் ரகளையில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்ற எதிர்க்கட்சியினர், காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளை காப்பாற்றுங்கள், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.