திங்கள், 28 செப்டம்பர், 2020

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்!

 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதே சமயம் மாநிலங்களவையில் வேளாண் மசதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு குடியரசுத் தலைவரையும் சந்தித்து கடிதம் அளித்தனர். 

Image

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணணி கட்சி சார்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பிய மு.க.ஸ்டாலின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Image

மேலும், வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டப்போராட்டம் நடத்தும் என்றும், நீதிமன்றம் செல்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கந்தன்சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்.பி. வைகோ பங்கேற்றார். கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். திருச்சியில் அன்பில் மகேஷ், கடலூரில் எம்.பி. திருமாவளவனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.