ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு: குளறுபடியால் மாணவர்கள் அவதி


Image

ஆன்லைனில் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதிய மாணவர்கள், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு, ஆன்லைனில் செப்டம்பர் 19ஆம் முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, முதல் தேர்வு நேற்று நடைபெற்றது. 

ஆன்லைனில் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து, அதற்கான விடைகளை A4 தாளில் எழுதிய மாணவர்கள், விடைத்தாள்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். விடைத்தாள்களை Upload செய்யும் Option வேலை செய்யாததால், விடைத்தாள்களை கட்டி Speed Post மூலம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப மாணவர்கள் முடிவு செய்தனர். அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.