திங்கள், 21 செப்டம்பர், 2020

விவசாயிகளுக்கு எதிராக மரண உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது! - ராகுல்காந்தி

Image

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் மசோதாக்கள், ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வேளாண் மசோதா என்ற பெயரில் விவசாயிகளுக்கு எதிராக மரண உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், மோடியின் ஆணவம் மிகுந்த இந்த அரசாங்கம், மண்ணைப் பொன்னாக மாற்றும் விவசாயிகளின் கண்களில் ரத்தக்கண்ணீரை வர வைப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.