யோகா குரு பாபா ராம்தேவ் தயாரித்து விற்கும் பொருட்கள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பதஞ்சலி என்ற பெயரில் மாட்டு மூத்திரிம் கலந்து நாடு முழுவதும் விற்கப்பட்டு வருகிறது.
லக்னோவில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், நெல்லி ஜாம் பாட்டிலில் உற்பத்தி தேதி அக்டோபர் 20, 2016 என்றும், காலாவதி தேதி அக்டோபர் 19, 2017 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது மார்ச் மாதம் என்பதால், அக்டோபர் மாதம் தேதியிட்ட உணவு பொருட்கள் விற்பனைக்கு வந்திருப்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிகாரிகள் அந்த பாட்டிலை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்த அதிகாரி ஒருவர், பதஞ்சலி தயாரிப்புகள் ஆயுர்வேத மருந்து என்றும், அவை உணவு பொருள் அல்ல என தெரிவித்தார். வெவ்வேறு கடைகளில் இருந்து பதஞ்சலி தயாரிப்புகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பதஞ்சலி பொருட்களில் மாட்டு மூத்திரம் கலக்கப்பட்டுள்ளதாக அந்த பொருட்களுக்கு முஸ்லிம்அமைப்பால் பத்வா (தடை) விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.