வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்கள் April 14, 2017

தமிழகத்தில் நடந்த என்கவுண்டர்கள்


1980 - தர்மபுரி பகுதியில் நக்சலைட்களை ஒழிக்க என்கவுண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

1998 - சென்னை, ரவுடி ஆசைத்தம்பி போலீசாரால் என்கவுண்டர் 

2002 - தீவிரவாதி இமாம் அலி மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை போலீசார் சுட்டு கொன்றனர் 

2003 - தூத்துக்குடி, வெங்கடேச பண்ணையார் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் 

2004 - சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை 

2007 - போதை மருந்து கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெள்ளை ரவி சுட்டுக் கொலை 

2010 - கோவை, 2 குழந்தைகளை கடத்திக் கொலை செய்த மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார் 

2010 - பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலுவை போலிசார் சுட்டுக் கொன்றனர். 

2012 - சிவகங்கை, காவலர் ஆல்பின் சுதன் கொலை செய்த குற்றவாளிகள் பிரபு, பாரதியை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர் 

2012 - சென்னை, வங்கிகளில் கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் என்கவுண்டர் முறையில் கொன்றனர் 

2015 - போலீஸ் என்கவுண்டர்கள் அனைத்தும் கொலைகள் என்று கருத முடியாது - உயர்நீதிமன்றம் 

2017 - ஜனவரியில் சிவகங்கை, ரவுடி கார்த்திகைச்செல்வனை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். 

2017 - ஏப்ரலில் ராமநாதபுரம், ரவுடி கோவிந்தனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். 

Related Posts: