
பங்களாதேஷில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ரோகிங்கியா முஸ்லீம்களுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரை சொந்த தேசமாகக்கொண்ட இவர்களை வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக மியான்மரில் தங்கியுள்ளதாகக் கூறி இவர்களுக்குக் குடியுரிமை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. மேலும், ரோகிங்கிய முஸ்லீம்கள் மீது பவுத்தர்கள் கொடூர இனவெறி தாக்குதல்களை நடத்திவருகிறனர். பவுத்தர்களின் இனவெறிக்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். குழந்தைகளை உயிருடன் கொளுத்தம் அவலங்கள் தினம்தோறும் நடந்துவருகின்றன.
இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 3 லட்சம் முஸ்லீம்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்தவர்கள் உணவு மற்றும் குடிநீர் பஞ்சத்தால் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தநிலையில், உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள் உணவு மற்றும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதால் கிடைக்கும் உணவை பகிர்ந்து கொள்வதாக அகதிகள் தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கான ரோகிங்கிய முஸ்லீம்களுக்கு இந்த உதவிகள் போதாதென்றும், சர்வதேச நாடுகளிடம் பெற நிவாரணப்பொருட்களை பெறுவதற்கு முயற்சித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மரின் ராகினி மாநிலத்தில் ரோகிங்கிய முஸ்லிம்கள் லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். மியான்மரை சொந்த தேசமாகக்கொண்ட இவர்களை வங்கதேசத்தில் இருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக மியான்மரில் தங்கியுள்ளதாகக் கூறி இவர்களுக்குக் குடியுரிமை வழங்க மியான்மர் அரசு மறுத்து வருகிறது. மேலும், ரோகிங்கிய முஸ்லீம்கள் மீது பவுத்தர்கள் கொடூர இனவெறி தாக்குதல்களை நடத்திவருகிறனர். பவுத்தர்களின் இனவெறிக்கு இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். குழந்தைகளை உயிருடன் கொளுத்தம் அவலங்கள் தினம்தோறும் நடந்துவருகின்றன.
இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 3 லட்சம் முஸ்லீம்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்தவர்கள் உணவு மற்றும் குடிநீர் பஞ்சத்தால் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்தநிலையில், உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள் உணவு மற்றும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதால் கிடைக்கும் உணவை பகிர்ந்து கொள்வதாக அகதிகள் தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கான ரோகிங்கிய முஸ்லீம்களுக்கு இந்த உதவிகள் போதாதென்றும், சர்வதேச நாடுகளிடம் பெற நிவாரணப்பொருட்களை பெறுவதற்கு முயற்சித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.