சனி, 9 மார்ச், 2019

இந்தியாவில் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் சுதந்திரமாக வலம்வரும் நீரவ் மோடி! March 09, 2019

Image
இந்தியாவில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக உலவும் வீடியோவை The Telegraph ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தனர்.
இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. 
நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி, தற்போது லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. 

source ns7.tv