சனி, 9 மார்ச், 2019

20அடி மரத்திலிருந்து அருள் சொல்லும் சாமியார் தவறி விழுந்து உயிரிழப்பு! March 08, 2019

Image
கோவை பேரூர் அருகே 20 அடி மரத்தில் இருந்துகொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய பூசாரி எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
கோவை பேரூர் அருகே சுண்டக்காமுத்தூர் பகுதியில் பழமையான கோயில் அமைந்துள்ளது. இங்கே
பூஜை செய்யப்பட்ட 20 அடி மரத்தின் மீது படுத்துக்கொண்டு ஐயாசாமி என்ற பூசாரி பக்தர்களுக்கு வாக்கு கூறினார். ஆக்ரோஷமாக பக்தர்களுக்கு குறி சொல்லிக் கொண்டிருந்த அவர் திடீரென நிலைதடுமாறி அங்கிருந்து கீழே விழுந்தார். 
படுகாயமடைந்த பூசாரி ஐயாசாமியை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பூசாரி ஐயாசாமி 20 அடி மரத்தில் இருந்து கீழே தவறி விழும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 
source ns7.tv