செவ்வாய், 26 நவம்பர், 2019

டெல்லி மக்களை குண்டு வீசி கொன்றுவிடுங்கள்: உச்சநீதிமன்றம் ஆவேசம்!

Image
காற்று மாசுவால் மக்கள் சாவதை விட, வெடிகுண்டுகளை வீசி கொன்று விடுங்கள் என, மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவால், மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காற்று மாசை குறைப்பதில், டெல்லி அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தது. உலகம் நம்மைப் பார்த்து சிரிப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், மக்களின் ஆயுளை அரசுகள் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினர். 
மேலும், காற்று மாசுவால் மக்களை கொல்வதை விட, வெடிகுண்டுகளை வீசி அவர்களை கொன்று விடுவது மேல் எனவும் நீதிபதிகள் காட்டமாக குறிப்பிட்டனர். கருத்து வேறுபாடுகளை தள்ளிவைத்துவிட்டு, ஒன்றாக அமர்ந்து, பேசி காற்று மாசுவை சுத்திகரிக்கும் திட்டங்களை, 10 நாட்களுக்குள் இறுதி செய்யுமாறு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

credit ns7.tv

Related Posts:

  • பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் பங்குவர்த்தகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்ளுங்கள்  தனியார் நிறுவனம் என்றால் என்ன&nbs… Read More
  • குளிர் காலங்களில் சளி பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை ந… Read More
  • என்னடா நாடு இது...? என்னடா நாடு இது...? மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூ… Read More
  • Hadis முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைக் கண்டார்கள் என்று உங்களிடம் யார் அறிவிக்கின்றாரோ அவர் பொய் சொல்லி விட்டார். இறைவனோ "கண்கள் அவனைப் பார்க்காது' என… Read More
  • Hadis நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக… Read More