புதன், 20 நவம்பர், 2019

மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை!


Image
ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தை நக்சல் கூடாரமாக்க போராட்டக்காரர்கள் முயற்சிப்பதாக, மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக விடுதி உடைக்கட்டுப்பாடு, கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். 
அதனை ஒடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளார். \credit ns7tv