வியாழன், 28 நவம்பர், 2019

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...!

Image
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 
அதன்படி ஐந்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2020ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெறுகிறது. 2020ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தமிழ் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வும், ஏப்ரல் 20ம் தேதி கணித பாடத்திற்கான தேர்வும் நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி தமிழ் தேர்வும், ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெறவுள்ளது. ஏப்ரல் எட்டாம் தேதி கணிதத் தேர்வும், ஏப்ரல் 15ம் தேதி அறிவியல் தேர்வும், ஏப்ரல் 17ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெறுகிறது.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி 15 நிமிடங்களுக்கு தொடங்கி, நண்பகல் 12 மணி 15 நிமிடங்கள் வரை இரண்டு மணி நேரம் நடைபெறும் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசிப்பதற்கும், 5 நிமிடங்கள் விடைத்தாளை நிரப்புவதற்கும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
credit ns7.tv