வியாழன், 28 நவம்பர், 2019

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

Image
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். 
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3ஆக பிரிக்கப்படும் என சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை அடுத்து புதிதாக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 
இந்நிலையில் இரு மாவட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று  தொடங்கி வைக்கிறார். இதற்காக விழா நடைபெறும் இடங்களில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். 
புதிய மாவட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் பழனிசாமி, பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். 

credit ns7.tv