செவ்வாய், 26 நவம்பர், 2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதங்கம்...!

Image
காங்கிரஸ் கட்சி சொல்ல வேண்டியதை சொல்லாததும், செய்ய வேண்டியதை செய்யாததுமே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியினர் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய கே.எஸ்.அழகிரி, பாஜகவினரை ஐ நா சபைக்கு காங்கிரஸ் அனுப்பியதாகவும் ஆனால் காங்கிரசாரை திஹார் சிறைக்கு பாஜக அனுப்பி வைப்பதாகவும் குற்றம்சாட்டினார். 
பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதை காங்கிரஸ் தடுக்க தவறிவிட்டதாகவும் தனது ஆதங்கத்தை கே.எஸ்.அழகிரி வெளிப்படுத்தினார்.

credit ns7.tv