வெள்ளி, 15 நவம்பர், 2019

சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை...!


மெட்ராஸ் ஐஐடியில் 2011ம் ஆண்டு தொடங்கி இதுவரை தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
➤ மே 4, 2011 நித்தின் ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த இறுதியாண்டு எம்.டெக் மாணவர் இறுதி ஆண்டு பாடத்தை மீண்டும் தேர்ச்சி பெற வற்புறுத்தியதால் மனமுடைந்து விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
➤ ஏப்ரல் 8, 2012 - குல்தீப் யாதவ், உத்தரபிரதேசத்தை இராண்டாம் ஆண்டு பி.இ. மாணவர் காதல் தோல்வி காரணமாக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
➤ அதே அண்டு ஆகஸ்ட் 22 - மானசா மெருகு, ஆந்திராவை சேர்ந்த முதலமாண்டு எம்.டெக் மாணவி குடும்ப பிரச்சனையால்  விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை
➤ நவம்பர் 4, 2013 - ஆகாஷ் குமார் மீனா, ராஜஸ்தானை சேர்ந்த முதலாமாண்டு பி.இ மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
➤ செப்டம்பர் 22, 2015 - நாகேந்திர குமார் ரெட்டி, ஆந்திராவை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மெ.டெக் மாணவர் தேர்வு தோல்வி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 
➤ ஒருமாத இடைவெளிக்குள்ளாக அக்டோபர் 19 - ராகுல் ஜி பிரசாத்  கேரள மாநிலத்தை சேர்ந்த இறுதி ஆண்டு பி.டெக் மாணவர் தேர்வில் தோல்வியடைந்ததால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ ஜூலை 14, 2016, மகேஸ்வரி என்றஆந்திராவை சேர்ந்த ஆய்வு மாணவி, விடுதி அறையில் அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ டிசம்பர் 5, 2018 - அதிதீ சிம்ஹா, பெங்களூரை பிறப்பிடமாக கொண்ட ஐஐடி பேராசிரியர் குடியிருப்பில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
➤ ஜனவரி 1, 2019 - ரஞ்சனா குமாரி, ஜார்கண்டை சேர்ந்த ஆய்வு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
➤ ஜனவரி 28, 2019 - கோபால் பாபு, உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதலாமாண்டு எம்.டெக் மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்
➤ செப்டம்பர் 22, 2019 - ஷாஹல் கோர்மத், கேரளவை சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர் வளாக விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
➤ நவம்பர் 9, 2019 - பாத்திமா லத்தீப், கேரளாவை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவி மத ரீதியான ஒடுக்குமுறையால் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
credit ns7.tv