செவ்வாய், 26 நவம்பர், 2019

மகாராஷ்டிராவில் 162 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு!

Image
மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலம் இருப்பதை உணர்த்தும் வகையில் மும்பை தனியார் நட்சத்திர ஓட்டலில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு நடத்தினர்.   
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அம்மாநில முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் கடந்த சனிக்கிழமை பதவியேற்றனர். இதனை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தங்கள் வசம் 162 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக, அந்த கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். 
இதனை நிரூபிக்கும் விதமாக, தற்போது 162 எம்எல்ஏக்கள் அணி வகுப்பு, ஊடகங்கள் முன்னிலையில் இன்று மாலை நடைபெற்றது. இதில் 3 கட்சி எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். மேலும் அந்த கட்சிகளின் முக்கிய தலைவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

credit ns7.tv