செவ்வாய், 19 நவம்பர், 2019

மேலவளவு ஊராட்சித் தலைவர் படுகொலை வழக்கில் திருப்பம்....!

Image
மதுரை மேலவளவு ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட 13 பேர் விடுதலை செய்யப்பட்டதன் ஆவணங்களை சமர்பிக்க உள்துறை செயலகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996ஆம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதனையடுத்து 1997ஆம் ஆண்டு முருகேசன் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதில் 3 பேர் அண்ணா பிறந்தநாளில் நன்னடத்தை காரணமாக முன் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மீதமுள்ள 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் விடுதலையை எதிர்த்து வழக்கறிஞர் ரத்தினவேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன்,ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் விதித்த தண்டனை காலத்தை, தமிழக அரசு எளிதாக கையாண்டு குற்றவாளிகளை விடுவித்து இருப்பது கண்டனத்துக்குரியது என்றனர். மேலும் 13 பேர் விடுதலை செய்யப்படதன் அரசாணையை தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகவும் உள்துறை செயலகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
credit ns7.tv