புதன், 20 நவம்பர், 2019

மத்திய அரசிற்கு சசி தரூர் கேள்வி!

Image
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தியின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் படுகொலை செய்யப்பட்டதை அடுத்தே, சோனியா காந்தியின் குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், அந்த பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டிருப்பது வேதனை அளிப்பதாக சசி தரூர் தெரிவித்துள்ளார். 
பாதுகாப்பை குறைப்பதால் மத்திய அரசு என்ன சாதிக்கப் போகிறது என கேள்வி எழுப்பிய சசி தரூர், சோனியா காந்தி குடும்பத்தினரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேருமானால், அதற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
credit ns7.tv