வியாழன், 14 நவம்பர், 2019

கண்மாயில் நள்ளிரவில் கொட்டப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்...!

Image
மதுரை வீரபாஞ்சான் கண்மாயில் நள்ளிரவில் கொட்டப்பட்ட மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
மதுரை வீரபாஞ்சனில் 15 ஏக்கர் பரப்பளவில் வீரபாஞ்சான் கண்மாய் அமைந்துள்ளது. மழை காரணமாக தற்போது கண்மாயில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அங்கு 2 நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் 20 டன் அளவிற்கு மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டியுள்ளனர்.
இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னார்வலர்கள் உதவியுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்றினர். கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

credit ns7.tv