சனி, 16 நவம்பர், 2019

ப.சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்க மறுப்பு.... 86-வது நாளாக நீடிக்கும் சிறைவாசம்.....

Image
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது  ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் 21ந்தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. டெல்லி திகார் சிறையில் கடந்த 86 நாட்களாக சிதம்பரம் இருந்து வருகிறார்.
சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
credit ns7.tv