சனி, 27 நவம்பர், 2021

கட்சி வளரவில்லை, கட்டடங்கள் வளருது”, “ஓட்டைக் கப்பலில் தத்தளிக்கும் மாலுமி நீங்கள்” – வலுக்கும் வார்த்தைப் போர்

 நான்கு மாவட்ட கட்சி அலுவலகங்கள் திறப்பது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “ கட்சிகள் எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன. நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சியின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்” என்று ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tussel-between-p-chidambaram-and-annamalai-over-4-bjp-district-offices-374660/