சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் 07/11/2021 அன்று மாலை 08:30 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய தாழ்வு அழுத்தம் உருவாக உள்ளது. இதன் தாக்கம் காரணமாக வட தமிழக கடற்கரை மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடலோர மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இன்று சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிக அதீத கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூ, கரூர், திருச்சி, நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதிகமாக மழைப்பொழிவு பதிவான இடங்கள்
சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 21 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. அயனாவரம் பகுதியில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எம்.ஜி.ஆர் நகரில் (17 செ.மீ), அண்ணா பல்கலைக்கழகம் (16 செ.மீ), புழல் (15 செ.மீ), பெரம்பூர் மாநகராட்சி பூங்காவில் 14 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-rains-live-updates-tamil-nadu-rainfall-weather-updates-rain-forecast-schools-shut-down-366004/