புதன், 2 செப்டம்பர், 2020

கொரோனா நோயாளி உயிரிழந்த பிறகும் ரூ. 4 லட்சம் கேட்ட மருத்துவமனை: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

 கொரோனா நோயாளியின் சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் பெற்ற நிலையில் நோயாளி உயிரிழந்த பின்பும் உடலைக் கொடுக்க ரூ.4 லட்சம் தனியார் மருத்துவமனை கேட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக ரூ.7 லட்சம் கட்டிய நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்தவரின் உடலை பெற மேலும் ரூ.4 லட்சம் கட்ட வேண்டும் என்று அந்த தனியார் மருத்துவமனை உறவினர்களிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் உடலைப் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரூ. 25 ஆயிரம் மட்டும் மருத்துவமனைக்கு கட்டி உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர் 

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஊரக சுகாதாரத் துறை இயக்குனர், திருநெல்வேலி சுகாதார இணை இயக்குனர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

Related Posts:

  • 2 பெண்களை காணவில்லை நாகப்பட்டினம்,தோப்பு துறையை சேர்ந்த 20பேர் துணி எடுக்க திருச்சி கடை வீதிக்கு வந்த போது, இரண்டு பெண்களை மட்டும் காணவில்லை. பெனாஜிர்(22) துர்ஸா.(21). இ… Read More
  • வி.பி.சிங் ஈழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையை பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு திரும்பி வரச் செய்தது. இது தொடர்பாக… Read More
  • ஊட்டச்சத்து நிறைந்த துரியன் பழம் நிறைய மக்களிடம் மிகவும் பிரபலமான பழமாக உள்ளது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம் இனிப்பு சுவையை கொண்டுள்ளது. ஆரோக்கியம் தரும் துரியன் பழம் பல … Read More
  • கூலிப்படையினர் அட்டகாசம். தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படையினர் அட்டகாசம்.. சுட்டுத்தள்ள போலீசாருக்கு ரகசிய உத்தரவு? (செய்தி) // ஆமாம் கூலி வேலை செய்பவனை மட்டும் போட்டுத் … Read More
  • ‪#‎உண்மையை_உரக்கச்_சொன்னீர்‬ இந்துத்தவவாதிகள் முஸ்லிம்களற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற கோஷங்களை சமீபகாலமாக அதிகப்படியாக உச்சரித்து வருகின்றனர். இது குறித்து தனது கருத்த… Read More